இலங்கையை ரஷ்ய ஜனாதிபதியிடம் கொடுக்கவேண்டும்; சாடும் சரத் பொன்சேகா !
உக்ரைன்- ரஷ்யா யுத்தத்தை காரணம் காட்டி இலங்கையில் பொருட்களின் விலைகளை உயர்த்தி மக்களை கஷ்டத்தில் தள்ள முடியாது என தெரிவித்த சரத் பொன்சேகா , இலங்கையை ரஷ்ய ஜனாதிபதி புட்டினிடம்தான் பொறுப்பு கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. சுபீட்சத்தை காணமுடியாமல் உள்ளதாகவும் நாட்டு மக்கள் இன்று வேதனையில் வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மக்களுக்கு தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியாமல் வரிசைகளில் நின்று காலத்தை செலவழித்துக்கொண்டிருப்பதாகவு, இதனால் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் என்றும் கூறினார்.
அவர்கள் பாதைகளில் தங்கள் கோபத்தை கட்டுகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த அரசாங்கம் பிரச்சினைகளில் இருந்து விடுபட உக்ரைன் - ரஷ்யா யுத்தத்தை காரணமாக காட்ட முயற்சித்தால் நாம் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.