நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு கோட்டாபய மட்டுமே! அமைச்சர்
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வக் கட்சி மாநாடு உதவியாக அமைந்தது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று சனிக்கிழமை (26-03-2022) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கான ஒரே தீர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) மாத்திரமே. இதற்கு மாற்று வழிகள் கிடையாது. நாங்கள் கோட்டாபய மீது நம்பிக்கை கொண்டு முன்நோக்கி செல்வது மாத்திரமே மாற்று வழி.
நாட்டின் ஆட்சி மாற்றி ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதனை அனைத்து பிரதான கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இதனால், அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காணவே ஜனாதிபதி சர்வக் கட்சி மாநாட்டை கூட்டினார்.
மேலும் நேர்மையாக, அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைக் தீர்வு கண்பதற்காகவே சர்வக் கட்சி மாநாட்டை கூட்டியதாக ஜனாதிபதி கூறினார் எனவும் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.