பொருளாதார நெருக்கடி சிக்கித்தவிக்கும் இலங்கை; பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்த பிரிட்டன்!
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை காரணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையை பிரிட்டன் தனது பயண ஆலோசனை அறிக்கையில் விடுத்துள்ளது. இலங்கையில் மருந்துகள்,எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களிற்கு பற்றாக்குறை நிலவுகின்றதாக பிரிட்டன் தனது நாட்டிலிருந்து இலங்கை செல்ல விரும்பும் பயணிகளிற்கு எச்சரித்துள்ளது.
இறக்குமதிகளிற்கான அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக இலங்கை அடிப்படை பொருட்களிற்கான தட்டுப்பாட்டினை எதிர்கொள்கின்றது,கடைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், மருந்தகங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கலாம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
மேலும் மின்வெட்டுக்கான சாத்தியங்கள் உள்ளன எனவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.
டெங்கு, கொரோனா வைரஸ் குறித்தும் பிரிட்டன் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.