நத்தார் பண்டிகை வரவுள்ள நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
இலங்கையில் அரசு நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையில் முட்டையை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் சிரமப்பட்டு வருதால் தற்போது முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, சில கடைகளில் முட்டை விலை, 55 ரூபாய் முதல், 57 ரூபாய் வரையிலும், சில கடைகளில், 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
முட்டையின் மொத்த விற்பனை விலை 52 ரூபாய் முதல் 54 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், இந்த நிபந்தனைகளால் கட்டுப்பாட்டு விலையில் முட்டை வழங்க முடியாததால், முட்டை விற்பனையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் முட்டை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலைமைகளால் நத்தார் பண்டிகைக் காலத்தில் முட்டை தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும் முட்டை தட்டுப்பாட்டால் கேக் உட்பட பொருள்கள் செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.