மாலைதீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை படகு!
மாலைதீவு கடற்கரையில் பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குப் புறப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேருவளை கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த படகில் பயணித்த ஏனைய மீனவர்கள் படகின் மீது ஏறி நின்று உதவி கோரியுள்ளனர்.
இதையடுத்து, எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பலினால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேருவளை கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் பேருவளை, வளத்தறை, அம்பேபிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுடன் பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்று கடலுக்கு பயணித்துள்ளதாகக் கரையோர பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.