சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படும் அபாயத்தில் இலங்கை; விடுக்கப்பட்ட எச்சரிகை
அடுத்தவாரமளவில் இலங்கை கொரோனா ஆபத்து நிறைந்த சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த எச்சரிக்கையை இலங்கை தாதியர் சங்கம் வெளியிட்டிருக்கிறது.
இந்த நிலையில் இலங்கையிலுள்ள செல்வந்தர்கள் பலரும் நாட்டை விட்டு தப்பிச்செல்ல ஆரம்பித்திருப்பதாக அந்த சங்கத்தின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் விமான நிலையத்திலுள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.