இலங்கைக்கு காத்திருக்கும் மிகபெரும் ஆபத்து!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை இலங்கையில் பல பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ரஷ்யாவிலிருந்து சுற்றுலா வருமானம் இழக்கப்படும் என்றும், இரண்டாவதாக, இலங்கைக்கு வழங்க தயாராக உள்ள மலிவான கச்சா எண்ணெய் இழக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் நாடாக ரஷ்யா இருப்பதால், அந்த சந்தையும் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய விமானத்திற்கு தடைவிதித்த நீதிமன்றம் இதேவேளை, இலங்கையின் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளது.