யாழ். சாவகச்சேரியில் விசேட சுற்றிவளைப்பு! சிக்கிய 25 டிப்பர்கள்
யாழ். கொடிகாமம் சாவகச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 25 டிப்பர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இதேவேளை, அனுமதிப் பத்திரங்களின்றி மணலுடன் 24 டிப்பரும் அனுமதியின்றி மரக்குற்றிகளுடன் ஒரு டிப்பரும் என 25 டிப்பர்கள் கொடிகாமம், சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் பணிப்புரைக்கமைய நேற்றைய தினம் (28-08-2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட டிப்பர்களையும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் முற்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் தயாராகியுள்ளனர்.
தொடர்ச்சியாக அனுமதியின்றி டிப்பரில் மண் அகழும் செயற்பாடு நடைபெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.