இருபது ஓவர் உலகக் கிண்ண போட்டியில் இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்க
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் ஷார்ஜாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்க 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 142 விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியில் பத்தும் நிஸங்க 72 (58) ஓட்டங்களையும் சரித் அசலங்க 21 (14) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், தப்ரேஸ் ஷம்சி, டுவைன் பிரிட்டோரியஸ் தலா 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதனையடுத்து 143 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றிபெற்றது.
தென்னாபிரிக்க அணியில் தெம்பா பாவுமா 46 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 23 ஓட்டங்களும் பெற்றனர்.