பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
இந்தியாவின் டெல்லியில் 39 வயது மகன், தனது 65 வயது தாயாரை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயார் தனது இளம் வயதில் தகாத உறவில் இருந்ததாக கூறி, கடந்த ஓகஸ்ட் 11 அன்று இரவு 9:30 மணியளவில், தனது தாயை தனிஅறையில் பூட்டி, குறித்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கடந்த கால உறவுக்கான தண்டனை
அதை அவரது கடந்த கால உறவுக்கான தண்டனை என்றும் தெரிவித்துள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகு, ஓகஸ்ட் 14 அன்று இரண்டாவது முறையாகவும் அவர் தாயை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதையடுத்து மறுநாள் (15), தாய் தனது இளைய மகளிடம் நடந்ததைக் கூற, இருவரும் ஹவுஸ் காசி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு அளித்த நிலையில் மகன் கைது செய்யப்பட்டார்.