நான்கு நாட்களில் சமையல் எரிவாயு தட்டுபாடுக்கு தீர்வு
நான்கு நாட்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் தினசரி 120,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன. மேல் மாகாணம், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சமையல் எரிவாயு கொள்வனவுக்கான வரிசைகள் நாளை காலையுடன் முடிவடையும் என லிட்ரோ எரிவாயுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவமனைகள், மீன்பிடித்தல் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தெமட்டகொட மற்றும் மருதானை பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நேற்று இரவு இடம்பெற்றது. மருதானை மற்றும் தெமட்டகொட பொலிஸ் நிலையங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமையவே இது இடம்பெற்றுள்ளது. இந்த எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் விநியோகிக்கப்பட்டது.
இங்கு சுமார் ஆயிரம் சிலிண்டர் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது. கொழும்பு 07, குதரநாச சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் தெரிவித்துள்ளது. மேலும், கொழும்பு 01 முதல் 15 வரை உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் விரைவில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், லிட்ரோ எரிவாயுவில் தற்போது 10 நாட்களுக்கு போதுமான எரிவாயு இருப்பு உள்ளது. 03 எரிவாயுக் கப்பல்களுக்குத் தேவையான 10 மில்லியன் டொலர்கள் ஏற்கனவே திங்கட்கிழமை பிற்பகல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.