சட்டப்பூர்வமாக ராஜினாமா செய்யாத முப்படை பலர் வீரர்கள் கைது
முப்படைகளில் இருந்து சட்டப்பூர்வமாக ராஜினாமா செய்யாத 679 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 22 ஆம் திகதி முதல் இன்று (5) வரை பொலிஸ் மற்றும் இராணுவம் இணைந்து மேற்கொண்ட சோதனைகளில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 535 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 63 கடற்படை வீரர்களும் 81 விமானப்படை வீரர்களும் அடங்குவர்.
கடந்த மாதம் 22 ஆம் திகதி தகவல் துறையில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில், பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தா, முப்படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.