ரிசாட் வீட்டில் உயிரிழந்த ஹிஷாலினி; இஸ்லாமியர்களிடம் சமூக ஆர்வலர் வேண்டுகோள்
முன்னாள் அமைச்சர் ரிசாட் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமியின் மரணம் நாட்டெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சமூக ஆர்வலரின் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த நபர் இஸ்லாமிய வீடுகளில் பணிபுரிந்த 25 இற்கும் மேற்பட்ட மலையத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்ப்பியுள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன் சிறுமிகளை வேலைக்கு வைத்திருக்கும் இஸ்லாமியர்களிடம் அவர் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளார்.
இதேவேளை ரிசாட் வீட்டில் மலையக சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் குறித்த காணொளி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.