நடத்துனர்கள் இன்றி 4 பகுதிகளுக்கு சேவையை ஆரம்பித்த இ.போ.ச பேருந்துகள்!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இயங்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் நடத்துனர்கள் இன்றி நான்கு பகுதிகளுக்கு கடந்த திங்கட்கிழமை முதல் (19-06-2023) சேவையை ஆரம்பித்தன.
மேற்படி பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் நடத்துனர்கள் பணத்தை மோசடி செய்வதாக எழுந்த முறைப்பாடுகள் காரணமாகவே இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம், கொட்டாவை மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திலிருந்து காலி, மாத்தறை, எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலைக்கு செல்லும் பஸ்கள் நடத்துனர்கள் இன்றி பயணிக்கும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து பயண சீட்டுகள் மகும்புரா மல்டிமோடல் போக்குவரத்து மையத்தில் நடத்துனர்களால் வழங்கப்படும், அதன் பிறகு பேருந்து ஒரு ஓட்டுநருடன் மட்டுமே புறப்படும்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ருஹுணு பஸ் கம்பனியின் வருமானம், மற்ற நாட்களை விட நடத்துனர் இன்றி முதல் நாளில் 1 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.