யாழில் மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதிக்கு நேர்ந்த கதி!
யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (22-10-2023) மதுபோதையில் பேருந்து செலுத்திய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரதை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை வழிமறித்து சோதனையிட்ட போது, சாரதி போதையிலிருந்தமை தெரியவந்தது.
இதனையடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, நேற்று அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு 30 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
மேலும், அவரது சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு இரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.