வவுச்சர் வழங்குவதாக கூறி மொட்டுக்கட்சி கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட மக்கள்:புபுது ஜாகொட குற்றச்சாட்டு
வவுச்சர் வழங்குவதாக கூறி ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டத்திற்கு மக்கள் அழைத்து வரப்பட்டனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மாளிகாவத்தை, தெமட்டகொட மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளிலிருந்து மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
புதிய ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்ள வவுச்சர் வழங்குவதாக கூறியே மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டம் ஆரம்பமானது முதல் இறுதி வரையில் கூட்டத்தில் பங்கேற்றிருப்பவர்களுக்கு மட்டும் இந்த வவுச்சர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |