ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் வைத்தியசாலையில் அனுமதி
நானுஓயாவில் கெப் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளான சம்பவம் பதிவாகி உள்ளது.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா, தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (21) இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்கு பயணித்த கெப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
அவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.