யாழில் இரு பெண்கள் உட்பட 6 பேர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் ஆறு பேர் பொலிஸாரினால் நேற்று (26) கைது செய்யப்பட்டனர்.
பொலிஸார் இக்கைது நடவடிக்கையின்போது 2 பெண்களும் 4 ஆண்களும் சிக்கியுள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை
யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று நடத்திய விசேட சோதனை நடவடிக்கை வேளையில், 100 போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த பெண் ஒருவரும், கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்கு வைத்திருந்த மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து பொலிஸார் விசாரணைகளை நடத்தினர்.
அதேவேளை ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த நான்கு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அந்த நான்கு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.