நடுக்கடலில் விஷ திரவத்தை குடித்த 5 இலங்கை மீனவர்களுக்கு நேர்ந்த நிலை!
நடுக்கடலில் மிதந்த போத்தலில் இருந்து திரவத்தை அருந்திய நிலையில், சுகவீனமடைந்த இரண்டு மீனவர்கள் வணிகக் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த படகிலிருந்த 6 மீனவர்களில் 4 பேர் திரவத்தை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் சிங்கப்பூர்க் கொடியுடன் பயணித்த வர்த்தகக் கப்பலினால் மீட்கப்பட்ட ஏனைய இரு மீனவர்களும், இலங்கை கடற்படைக்கு சொந்தமான விஜயபாகு கப்பலில் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலைஇல் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.