யாழ்ப்பாணத்தில் கொல்களம் முற்றுகை; கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசுக்கள் மீட்பு
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் சட்டவிரோத இயங்கி வந்த மாடு வெட்டும் கொல்களமொன்றை சவகச்சேரிப் பொலிஸார் முற்றுகையிட்டு கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை மீட்டுள்ளனர் .
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றுள்ளதுடன் மாடுகளை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்டுள்ளதுடன், பொலிஸார் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மட்டுவில் பிரதேசத்தில் அண்மையில் வளர்ப்பு மாடுகள் திருடப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் பொலிஸார் , சட்டவிரோதமாக இயங்கி மாடு வெட்டும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.
சாவகச்சேரி- மட்டுவில் கிராமத்தில் திருடப்பட்ட ஒரு மாட்டினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன் ஏனைய இரண்டு மாடுகள் அடையாளம் காணப்படாத நிலையில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது.