இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்; 5 நாட்களுக்குள் தட்டுப்பாடு நீங்கும்!
நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 5 நாட்களுக்குள் நீங்குமென லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜானக்க பத்திரண தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பனவற்றின் தலையீட்டுடன், அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இன்னும் 05 நாட்களுக்குள், அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் அந்தத் தொகையை வழங்கக்கூடியதாக இருக்கும் பணிப்பாளர் ஜானக்க பத்திரண தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைகிறதாக தெரிவித்த அவர் , எதிர்காலத்திலும் இந்த நிலைமை நீடிக்கும் எனவும் கூறினார்.
இவ்வாறான நிலையில் , சமையல் எரிவாயு கிடைப்பதில் தற்போது எவ்வித குறைப்பாடும் இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்