அரிசிக்கு தட்டுப்பாடு வரலாம்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் தற்போது அரிசிக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக மரதகஹமுல பிரதேசத்திலுள்ள அரிசி மொத்த விற்பனை நிலையத்திலும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
தற்போது நிலவும் விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து அரிசி உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு கடினம் என்பதால் இந்த நிலைமை ஏற்பட் டுள்ளது என அந்தச் சங்கத்தின் தலைவர் பி. கே. ரஞ்ஜித் கருணா திலக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மரதகஹமுல அரிசி ஆலைகளில் தற்போது அரிசி உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரதகஹமுல அரிசிச் சந்தையில் தற்போது அரிசி விலைக்குப் பெற்றுக் கொள்வதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நாட்களில் தொடர்ச்சியாக அரிசி தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.