கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு!
கொட்டாஞ்சேனை – பரமானந்தா மாவத்தையில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி திருத்துபவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் துப்பாக் கிச்சூடு நடந்ததற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.