இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்!
புதிய மின்சார விலைச்சூத்திரத்தின் படி, முதல் 30 யுனிட்டுக்களுக்கான கட்டணம் ஒரு யுனிட்டுக்கு 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் 30 யுனிட்களுக்கு, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நிலையான கட்டணமாக 1,500 ரூபாயும், மற்றும் கட்டணமாக 3,000 ரூபாய் அறவிடப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மின் கட்டண திருத்தம்
“மின் கட்டண திருத்தம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதல் யுனிட் 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகிறது. 1,500 நிலையான கட்டணங்கள். அதாவது 30 யுனிட் பயன்படுத்துபவர் 3,000 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்த அவர் மின் கட்டணம் மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் இது கறுப்புச் சந்தையைத் தாண்டிய விலை உயர்வு என தெரிவித்த ஆனந்த பாலித, மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நோக்கத்தில் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறதாகவும் தெரிவித்தார்.
You My Like This Video