உக்ரைனுள்ள இந்தியர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
உக்ரைன் ரெயில்களில் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போர் நடந்து வருகிற உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் ரெயில்களில் இந்தியர்களும், பிற வெளிநாட்டினரும் ஏறிப்பயணிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
இதன்படி இந்த அதிர்ச்சித்தகவலை இந்திய மாணவர் ஆன்ஷ் பண்டிதா வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர், " இந்தியர்களையோ, பிற வெளிநாட்டினரையோ ரெயிலில் ஏற ரெயில்வே காவலர்கள் அனுமதிப்பதில்லை.
இங்கு (வோக்ஜல் ரெயில் நிலையம்) எவ்வளவு கூட்டம் இருக்கிறது பாருங்கள். இங்கே சலசலப்புகள், கைகலப்புகள் நடக்கின்றன. இந்தியர்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறார்கள்.
என்ன நடக்குமோ என்று எல்லோரும் பயப்படுகிற நிலையில் நாங்கள் நமது கொடியுடன் இங்கே இருக்கிறோம்" என கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, " எங்களை விரைவாக இந்திய தூதரகம் வெளியேற்றும் என்று நம்புகிறோம்.
இந்திய தூதரகம் விரைவாக எங்களை வெளியேற்றி நாங்கள் வீடு செல்ல வழிவகுக்க வேண்டும்" என்றும் கூறி உள்ளார்.