சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!
பிரபல பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலை என பரபரப்பு தகவலை சுஷாந்தின் உடல் கூறாய்வு பரிசோதனை செய்யும்போது உடனிருந்த பிணவறை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், மும்பை காவல்துறையினர் நடத்திவந்த இந்த விசாரணை மத்திய விசாரணை அமைப்பான சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
அதோடு அமுலாக்கத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவையும் நடிகரின் மரண குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றன.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம்
இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவலொன்று தற்போது வெளியாகியுள்ளது.
இவரின் உடலை உடல் கூராய்வு பரிசோதனை செய்யும்போது அந்த குழுவில் இருந்த ரூப்குமார் ஷா என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ரூப்குமார் கூறுகையில், "சுஷாந்த் சிங் உயிரிழந்த தினத்தன்று எங்களது கூப்பர் மருத்துவமனைக்கு, 5 சடலங்கள் வந்திருந்தன. அதில் ஒன்று பிரமுகரின் சடலம் என்றனர்.
நாங்கள் அங்கே போய் பார்த்தபோதுதான் அது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சடலம் என்பது தெரியவந்தது. அவரது உடலில் பல அடையாளங்கள் மற்றும் கழுத்தில் இரண்டு முதல் மூன்று இடங்களில் காயங்கள் இருந்தன.
#WATCH | "When I saw Sushant Singh Rajput's body it didn't appear to be a case of suicide. Injuries marks were there on his body. I went to my senior but he said we will discuss it later," says Roopkumar Shah, Mortuary Servant, Cooper Hospital, Mumbai pic.twitter.com/NOXAsaI8uH
— ANI (@ANI) December 26, 2022
உடற்கூறாய்வு செய்வதை முழுவதுமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் உயர் அதிகாரிகள் புகைப்படங்கள் மட்டும் எடுக்கக் சொன்னார்கள்.
அதனால் நாங்களும் அப்படியே செய்தோம். சுஷாந்தின் உடலை பார்த்ததும், இது தற்கொலை அல்ல, கொலை என்று என்னுடைய சிரேஷ்ட அதிகாரிகளிடம் கூறினேன்.
எனினும் , அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. பின்னர் உடலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தாக அவர் கூறியுள்ளார்.