பிரித்தானியாவில் நள்ளிரவில் கழிவறைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
பிரித்தானியாவில் உள்ள வீடொன்றில் நள்ளிரவில் கழிவறைக்குச் சென்ற பெண் பாம்பு இருப்பதை கண்டு அலறியடித்து ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பிரித்தானியவின் Stourbridge என்னும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
Stourbridge என்னும் பகுதியில் வசித்து வரும் லாரா டிரான்டர்(34) நள்ளிரவில் கழிவறைக்குச் சென்ற போது பெரிய பாம்பு இருந்ததை கண்டு பயத்தில் அலறியடித்து வெளியே ஓடியுள்ளார்.
பின்னர் லாரா கழிவறையில் பாம்பு இருப்பதை Sarah என்ற தோழியிடம் கூறி உதவிக்கு அழைத்துள்ளார். இதனை நம்பாத தோழி Sarah, Laura குடித்துவிட்டு உளறுகிறார் என நினைத்துள்ளார்.
லாரா என்னசெய்வது என்று தெரியாமல் பின்னர் பாம்பு பிடிப்பவர்களை அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் காலையில்தான் வரமுடியும் என கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து Sarahவின் சகோதரரான Dan-ஐ அழைத்துள்ளார்.
பின்னர் லாராவின் சகோதரர் Dan தனது நண்பரான Steve-ஐ உதவிக்கு அழைத்துள்ளார். இதனை அடுத்து Dan மற்றும் Steve ஆகிய இருவரும் சேர்ந்து கழிவறையில் இருந்த பாம்பை பிடித்துள்ளனர்.
இது குறித்து லாரா கூறியது, "கழிவறையில் இருந்த பாம்பின் உருவம் இன்னமும் என் கண் முன்னே நிற்கிறது என தெரிவித்துள்ளார். அந்த எண்ணத்திலிருந்து விடுபட முடியவில்லை" என்று கூறியுள்ளார்.