கோட்டாபயவிற்கு அதிர்ச்சிக்கு மேல் தொடரும் அதிர்ச்சி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கூட்டப்படவுள்ள சர்வகட்சி மாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அனைத்துக் கட்சி மாநாட்டைப் புறக்கணிக்க பல எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளன. நேற்றைய மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்ததுடன், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 குழுக்களில் உள்ள பல கட்சிகளும் மாநாட்டை புறக்கணிப்பதாக தெரியவந்துள்ளது.
அந்த 11 கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் அத்துரலியே ரத்தின தேரர் ஆகிய கட்சிகள் மாத்திரமே இம்மாநாட்டில் பங்கேற்க தீர்மானித்துள்ளன.
ஜாதிக நிதஹஸ் பெரமுன (ஜே.என்.பி) மற்றும் பிவித்துரு ஹெல உறுமய (ஜாதிக ஹெல உறுமய) ஆகியன அனைத்துக் கட்சி மாநாட்டைப் புறக்கணிப்பதாக ஆரம்பத்திலேயே தெரியவந்துள்ளது .
எவ்வாறாயினும், எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் குழுவான ஐக்கிய மக்கள் சக்தி இன்னும் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லைஎனவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க நாளை பாராளுமன்ற குழு கூட்டம் கூடி அங்கு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் !
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக பல அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டிற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய ஆகியன நிராகரித்துள்ளன.
இந்நிலையில் சர்வகட்சி மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துகொள்ளாது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் 11 இல் இருந்து இரு கட்சிகள் மட்டுமே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கும் என அறிவித்துள்ளன.
இதேவேளை சர்வகட்சி மாநாட்டுக்கு சென்று இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அரச ஆதரவு கட்சிகளின் முடிவு அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.