இன்று குடமுழுக்கு கண்ட யாழ்.செம்மணி வாயில் சிவன் கோவில்! (Photos)
யாழ்.நாவற்குழி - செம்மணி வாயில் சிவன் கோவிலில் இன்று காலை குடமுழுக்கு இடம்பெற்றுள்ளது. சிவபூமி அறக்கட்டளையின் ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நீண்ட காலமாக குறித்த இடத்தில் சிவன் சிலை இருந்தது. எனினும் நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும்.
அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் சிவபூமி அறக்கட்டளை நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி ஏழு அடி உயரமான கருங்கல்லிலால் ஆன சிவலிங்கம் வைக்கப்பட்டு இன்று காலை குடமுழுக்கு இன்று காலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் மதப் பெரியவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.