சவர்மா உட்கொண்ட பெண்ணிற்கு நேர்ந்த சோகம்
இந்தியாவின், நாமக்கல் பகுதியில் உள்ள உணவகமொன்றில் சவர்மா வாங்கி சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப் பெண் 9ஆம் வகுப்பில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெண் கடந்த சனிக்கிழமை பிற்பகல் மதிய உணவுக்காக சவர்மா வாங்கி உட்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப் பெண்ணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதி அத்தோடு அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை அப் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாமக்கல் பகுதியில் உள்ள உணவகங்களில் இனிவரும் நாட்களில் சவர்மா தயாரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.