இலங்கையில் சில பகுதிகளில் திடீரென மாயமான மனிதர்களின் நிழல்கள்!
இலங்கையில் ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களில் சூரியன், இன்று (07) பிற்பகல் 12:12க்கு உச்சம் கொடுத்தது. இதனால், மனிதர்களின் நிழல், சில நிமிடங்களுக்கு மறைந்துவிட்டது.
அத்துடன், அந்த பிரதேசங்களில் அதிக வெப்பமாக காலநிலை நிலவுகின்றது. அதேவேளை கொழும்பில் இன்று பிற்பகல் வேளையில் மக்களின் நிழல்கள் மறைந்து விடும் என வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிழல்கள் இன்று (07.04.2025) மதியம் 12.12 மணிக்கு ஒரு கணம் மறைந்துவிடும் என்று வானியலாளர் அனுர சி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
சூரியன் ஒரே நேரத்தில் கொழும்பிற்கு மேலான வான்பரப்பில் உச்சம் கொடுப்பதால் இந்த நிகழ்வு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.