வீதியில் ஆசிரியை மீது பாலியல் சேட்டை; உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் அதிரடிக் கைது!
ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதாக கூறப்படும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஹொரண பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராவார். அத்துடன் சந்தேக நபர் பயணித்த சிறிய லொறியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பண கொடுக்கல் வாங்கல் முரண்பாடு
மொரகஹஹேன, மில்லவ பகுதியில் குறித்த ஆசிரியர் வீதியில் சென்றுகொண்டிருந்த போது லொறியில் பயணித்த சந்தேகநபர் ஆசிரியையை வீதிக்கு குறுக்கே சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியை 119 அவசர அழைப்பு பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், மொரகஹஹேன பொலிஸ் நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கும் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினருக்கும் இடையே பண கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் முரண்பாடு நிலவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 39 வயதுடைய ஆசிரியை ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபரை ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.