பேக்கரி உற்பத்தி மூலப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு
பேக்கரி உற்பத்தி மூலப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி பேக்கரி உற்பத்திக்கு தேவையான கோதுமை மா , வெண்ணெய் , நல்லெண்ணெய் மற்றும் பாமொயில் போன்ற மூலப்பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாகவே மூலப்பொருட்களை இறக்குமதி செய்யமுடியவில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அதேசமயம் மூலப்பஒருட்களின் தட்டுப்பாட்டால் தற்போதைய சூழ்நிலையில் இன்னும் ஒரு மாத காலத்திற்கு பேக்கரி தொழிலை முன்னெடுத்துச் செல்வதே சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.