நுவரெலியா விபத்து: செந்தில் தொண்டமான் விடுத்த கோரிக்கை!
நுவரெலியா - நானுஓயாவில் நேற்று இரவு (20-01-2023) இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த 7 பேரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுத்துள்ளார் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இவ்வாறான வீதி விபத்துக்கள் இடம்பெறாமல் இருப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.