கிளிநொச்சியில் பரபரப்பு சம்பவம்!
கிளிநொச்சி தருமபுரம் பிரதேசத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
மீட்கப்பட்ட சடலம் கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற இளைஞனுடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலத்தில் அடிகாயங்களும் காணப்படுவதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில் தர்மபுரம் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.