ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர ராஜினாமா!
ஜனாதிபதி கோட்டாபயவின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர வினால் தனது இராஜினாமா கடிதத்தை இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பார் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் , ஜனாதிபதி அவரின் இராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக நம்பகரமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதேவேளை ஜனாதிபதியின் புதிய செயலாளராகப் பிரதமரின் தற்போதைய செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படக்கூடுமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக் கப்படவுள்ள காமினி செனரத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராகவும், பிரதம அதிபராகவும் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியாவார்.
இதேவேளை, பி.பி. ஜயசுந்தரவின் நடவடிக்கைகள் அண்மைய நாட்களில் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
குறிப்பாக, ஜனாதிபதியின் சகோதரரும் அமைச்சருமான சமல் ராஜபக்ஷ பி.பி. ஜயசுந்தரவை கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.