வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்: சிக்கிய பல லட்சம் பெறுமதியான மர்ம பொருள்!
மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கடலட்டை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இந்த மீட்பு சம்பவம் நேற்று வியாழக்கிழமை (23-06-2022) மாலை இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவது,
மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடலட்டை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தப்பட்ட 700 கிலோ எடை கொண்ட கடல் அட்டையை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சர்வதேச அளவில் 35 லட்ச ரூபாய் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.