இலங்கை கடற்பரப்புகளில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகளில் ஏற்பட்டுள்ள பருவ கால நிலை மாற்றங்களால் எதிர்வரும் நாட்களில் மழையுடன் கூடிய வானிலையே நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறையிலும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்வதற்குமுன் அவதானமாக செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.