சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட பாடசாலைகள்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயங்கள் இரண்டு நாட்களுக்கு, பாடசாலையை மூட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்கு முன்னாள் இரண்டு பெரிய மரங்கள் உள்ளதாகவும், அது முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் பாடசாலையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாளையும் பாடசாலையை மூட முடிவு
இதன்படி இன்றும் நாளையும் பாடசாலையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பாடசாலையில் 358 மாணவர்கள் கல்வி கற்றுவருவதாகவும், 1 முதல் 13ஆம் வகுப்பு வரை பாடசாலையில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக பாடசாலைக்கு அருகில் இரண்டு பெரிய மரங்கள் விழும் அபாயத்தில் உள்ளன என்றும், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்திற்கு இரண்டு மரங்களை வெட்டுமாறு அதிபரால் அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்காததால், மரத்தின் பல கிளைகள் பாடசாலை கட்டிடங்களின் மீது விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.