வகுப்புக்கு சென்றுகொண்ருந்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த பெரும் துயரம்
லொறியும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மத்ரிகிரி பிசோபுர பிரதான வீதியின் வட்டடகேய நான்கு வழிச் சந்தியில் இச் சம்பவம் நிகந்துள்ளதாக தெரிய்விக்கப்பட்டுள்ளது.
பிசோபண்டாரகம சஞ்சனா சத்சராணி ஜயரத்ன என்ற மித்ரிகிரிய தேசிய பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
வண்டியில் பயணித்தபோது விபத்து
நவநகர பிரதேசத்தில் தனியார் வகுப்பிற்கு செல்வதற்காக குறித்த மாணவியும் அவரது நண்பர்கள் ஐவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கொஹொம்படமன பிரதேசத்தில் இருந்து நவநகர நோக்கி பயணித்த போது பிசோபுர பிரதேசத்தில் இருந்து மெதிரிகிரிய பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது முச்சக்கரவண்டி ஏமா பகுதியில் உள்ள குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்தவர் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வெலிசர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.