பாரிய விபத்தில் இருந்து தெய்வாதீனமாக தப்பிய பாடசாலை மாணவர்கள்!
இன்று காலை புளியமரம் ஒன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திகன- கெங்கல்ல வீதியிலுள்ள மரம் திடீரென முறிந்து வீழ்ந்ததைக் கண்ட வேன் சாரதி, விபத்தைத் தவிர்க்க முயன்றார்.
ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதி
எனினும், வேனை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மதில் மற்றும் தொலைபேசிக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் வேனின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகனத்தில் பயணித்த இரண்டு பெண் ஆசிரியர்கள் மற்றும் பல பாடசாலை மாணவர்கள் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த புளியமரத்தை அகற்றுமாறு பிரதேச மக்கள் காணியின் உரிமையாளருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அறிவித்தும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.