பாடசாலையில் போதையில் தள்ளாடிய மாணவர்கள் : ஒருவர் ஆபத்தான நிலையில்
குருணாகலில் ஆரம்ப பாடசாலையின் நான்கு மாணவர்கள் பாடசாலையில் உள்ள மரத்தடியில் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆரம்ப பாடசாலை ஒன்றின் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் நால்வர் மரத்தடியில் மயங்கி விழுந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (16) குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்களில் ஒருவர் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
போதையில் மாணவர்கள்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் லிஹினிவெஹர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நான்கு மாணவர்களும் போதைப்பொருளை உட்கொண்டு பாடசாலையில் சுயநினைவின்றி இருந்ததாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பாடசாலையின் போது குடிபோதையில் மரத்தடியில் விழுந்து கிடந்த மாணவர்கள் ரம்பதகல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இருந்தமையால் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரம்பதகல்ல வைத்தியசாலையின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இனந்தெரியாத வகை மாத்திரையை உட்கொண்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மதுரகொட பொலிஸார் தெரிவித்தனர்.
மரத்தில் விழுந்து சில மாத்திரைகளை உட்கொண்டதாக மாணவர்கள் கூறியதாகவும், ஆனால் பெரியவர்கள் யாராவது இதை மாணவர்களுக்கு கொடுத்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மதுரகொட பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு பேரில் ஒரு மாணவனின் தந்தை போதைப்பொருளுக்கு அதிக அடிமையாகியுள்ளதாகவும், அவர் தனது மாத்திரைகளை கொண்டு வந்து பயன்படுத்தியதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.