ராஜபக்சர்களின் ரகசிய திட்டத்தை அம்பலப்படுத்திய சரத் பொன்சேகா!
அலரி மாளிகை முன்பாக அமைதிப் போராட் டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தாக்குவதற்கும் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்கும் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக பீல்ட் மார் ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அது குறித்து நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அடக்குமுறை மற்றும் பொலிஸாரின் அதிகாரம் மூலம் மக்களின் இறை யாண்மை ஒடுக்கப்படு வதை மக்கள் எதிர்க்க வேண்டும் என அவர் தனது முகப் புத்தக பதிவில் வலியுறுத்தியுள்ளார்.'
போராட்டக்காரர்களே ஒன்றிணையுங்கள், போராடுங்கள்' எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேசமயம், எந்தவொரு சந்தர்ப் பத்திலும் அமைதியான முறையில் போராடுபவர்கள்மீது
அவ்வாறான நடவடிக்கை எடுக்கும் எதிர்பார்ப்பில்லை என பொதுமக்கள் பாது காப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.