பெரும் கதறல் மத்தியில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சாந்தனின் வித்துடல்
இந்தியாவில் மறைந்த ஈழ தமிழர் சாந்தனின் வித்துடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைசாலையில் இருந்து உச்சநீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து திருச்சி சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்திருந்தார்.
சாந்தன் அவரின் இறப்பு செய்தி தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தழிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறான நிலையில் இன்றையதினம் உடுப்பிட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று தலைவர் பிரபாகரனின் வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் இறுதியாக சற்றுமுன்னர் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலானோரின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






