முடிகிறது சனியின் வக்ர நிலை... இனி இந்த ராசிக்காரர்களுக்கு நன்மைதான்!
இந்த நேரத்தில் சனி பகவான் மகர ராசியில் வக்ர நிலையில், அதாவது பிற்போக்கான நிலையில் இருக்கிறார். சனியின் இந்த தலைகீழ் சஞ்சாரத்தால் பல ராசிக்காரர்கள் சனியின் கோபத்திற்கு ஆளாகி வருகின்றனர் என் ஜோதிட சாஸ்திரத்தின் கூறுகின்றன.
இவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கப்போகிறது என்பது நல்ல விஷயமாகும். அக்டோபர் 23-ம் திகதி, சனி பகவான் மகர ராசியில் முழுமையாக இயல்பு நிலைக்கு மாறுவார்.
சனியின் நிலை மாற்றத்திற்கு பிறகு சில ராசிக்காரர்கள் சனியின் கோபத்தில் இருந்து விடுபடுவார்கள். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்:
சனியின் இயக்கம் மேஷத்தின் பத்தாம் வீட்டில் இருக்கப் போகிறது. வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் பல நன்மைகளை அள்ளித் தரும்.
அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கும் இந்த வேளையில் நல்ல செய்திகள் கிடைக்கும். மேஷ ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். லாபம் உண்டாகும்.
கடகம்: கடக ராசிக்கு ஏழாம் வீட்டில் சனி சஞ்சரிக்கப் போகிறார். மகர ராசியில் சனி சஞ்சரித்த பிறகு, இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் துக்கங்கள் நீங்கி மகிழ்ச்சி மட்டுமே வந்து சேரும். மரியாதை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.
துலாம்: துலாம் ராசிக்கு நான்காம் வீட்டில் சனி தனது இயக்கத்தை மாற்றவுள்ளார். இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் உயரும். சில நல்ல செய்திகள் கிடைக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம்: புதிய வேலைகளை தொடங்கும் எண்ணம் இருந்தால், இந்தக் காலத்தில் தொடங்குவது சரியாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இக்காலம் மங்களகரமானது. நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், இப்போது செய்யலாம், நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம்:
சனி பகவான் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பரிசாக அளிக்கப் போகிறார். மகர ராசியில் சனி இருப்பதால் மீன ராசிக்காரர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபடுவார்கள். அதே நேரத்தில், நீங்கள் வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலும் வெற்றி பெறுவீர்கள்.