கொழும்பில் பரபரப்பாகும் அரசியல் களம்... ரணில் கட்சிக்கு தாவிய சஜித் கட்சி எம்.பி!
சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ரணிலின் தலைமையில் காலியில் இடம்பெற்ற கூட்டத்தின் போது அவர் இந்த ஆதரவை வழங்கியுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் குமாரசிறி ஹெட்டிகே நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் சமீபத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து உரிய நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.
முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் இருந்த காலத்தில் குமாரசிறி ஹெட்டிகே அவரது நாடாளுமன்ற விவகார செயலாளராக கமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.