சஜித் கட்சி முகவரியற்று காணாமல்போய்விடும்; சபித்த ரங்கே பண்டார!
ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்காலத்தில் ‘முகவரியற்று’ காணாமல்போய்விடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
நாட்டில் கட்சிகள் உருவாகலாம் என தெரிவித்த அவர், இலங்கை வரலாற்றில் அவ்வாறு உருவாகியும் உள்ளதாகவும் எனினும், அவை நிலைப்பதில்லை எனவும் கூறிய பாலித ரங்கே பண்டார , ஐக்கிய மக்கள் சக்திக்கும் இதேகதிதான் ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.
சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சஜித்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு நலன்கருதி செயற்பட்ட பௌசிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. அதாவது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தமது கட்சி எதிர்ப்பு என்பதையே அக்கட்சி இதன்மூலம் கூற விளைகின்றது.
தமது அணி சந்தர்ப்பவாத அரசியலையே நடத்துகின்றது என்பதை நிரூபிக்கும் வகையிலேயே சர்வதேச நாணய நிதிய தீர்மானம்மீதான வாக்கெடுப்பை சஜித் கட்சி தவிர்த்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.