உக்ரைனிய நகர் ஒன்றில் ஷெல் குண்டு தாக்குதல்! பலத்த உயிர்சேதம் ஏற்படும் அச்சம்
ரஷ்யப் படைகளின் தாக்குதலால் உக்ரைனின் மரியூபோல் நகரில் பலத்த உயிர் சேதம் ஏற்படும் அச்சம் நிலவுவதாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ரஷ்யாவின் எல்லைக்கு அருகே உள்ள தென்கிழக்கு நகரம் மரியூபோல். இந்த நகரத்தின் மீது பல மணித்தியாலம் தொடர்ச்சியான ஷெல் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது பற்றி துணை மேயர் செர்கே ஓர்லோஃப் கூறுகையில்,
ஆற்றங்கரையோர மாவட்டம் இசுய பொதுவாக தனது தந்தை உள்பட 1,30,000 மக்கள் இங்கு வசிக்கிறார்கள். "இது கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது" என அவர் கூறினார்.
"பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை எங்களால் கணக்கிட முடியவில்லை. ஆனால் குறைந்தது நூற்றுக்கணக்கான மக்கள் இறந்துவிட்டதாக நாங்கள் நம்புகிறோம். உடல்களை மீட்க நாங்கள் அங்கு செல்லவும் முடியாது," என்று அவர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கூறினார்.
பீரங்கி, ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்கள், வான் தாக்குதல்கள், ஏவுகணை தாக்குதல் என பல வடிவங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ரஷ்ய படையினர் இந்த நகரத்தை முற்றிலுமாக அழிக்க முயல்கிறார்கள்" என்று ஓர்லோவ் கூறுகிறார். ரஷ்யப் படைகள் எல்லா பக்கங்களிலும் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
"உக்ரைனிய ராணுவம் மிகவும் துணிச்சலானது. அதன் படையினர் நகரத்தை தொடர்ந்து பாதுகாப்பார்கள். ஆனால் ரஷ்ய ராணுவத்தின் பாணி கடற்கொள்ளையர்களைப் போல உள்ளது. யுக்ரேனிய படையினரை இலக்கு வைக்காமல் அவர்கள் முழு மாவட்டத்தையும் அழிக்கிறார்கள்," என்று ஓர்லோஃப் கூறுகிறார்.