கீவ் தொலைக்காட்சி கோபுரம் மீது ஆக்ரோஷ தாக்குதல்! வெளியான பலி எண்ணிக்கை!
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உலகின் இரண்டாவது உயரமான தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அவசர சேவைகள் அமைப்பு தெரிவிக்கின்றன.
ரஷ்யப் படைகள் தொடர்ந்து 6 ஆவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதெவேளை, உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.

குறிப்பாக, ரஷ்யப் படைகள் உக்ரைனின் அரசு கட்டிடங்கள், இராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதேவேளை, உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உலகின் 2-வது உயரமான தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் அன்டன் ஹெராஷ்செங்கோ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.