யாழில் நீண்டகாலமாக பொலிஸாருக்கு தண்ணி காட்டிய பிரபல ரவுடி; வெளிநாடு செல்லவிருந்த நிலையில் சிக்கினார்
யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய வாள்வெட்டு குழு ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் கடந்த 2019ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்துவந்ததாக கூறப்படுகின்றது.
யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும், மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுதுமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொக்குவிலை சேர்ந்தவரெனவும், தனுறொக் குறுப் என்ற வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன் உப்புமடம் - கோண்டாவில் பகுதியில் காட்வெயார்கடை உரிமையாளருக்கு தலையில் அடித்து கோமாவில் இருந்து சிகிச்சை பலன்றி இறந்த வழக்கில் பிரதான சந்தேகநபருக்கு யாழ்.நீதிமன்றில் இரண்டு பிடியாணைகள் உள்ளதாகவும், வினோதன் வீடு, அகிலசுமன் வீடு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பிரதானசுத்திரதாரி எனவும் கூறப்படுகின்றது.
மேலும் , ராஐா கிறீம் கவுஸில் மோட்டார் சைக்கிலை பறித்து சென்றவரும் கைதான சந்தேக நபரே எனவும் கூறப்படுகின்றது.
குறித்த ரவுடியின் தாயார் வெளிநாட்டில் இருப்தாகவும் அவரின் உதவியுடன் ஓரிரு மாதத்தில் இலங்கையை விட்டு தப்பிக்க இருந்த நிலையில், இன்று குறித்த நபர் மாறுவேடத்தில் அடையாளம் காணாதவாறு உருமாற்றம் செய்து தலைமறைவாகியிருந்த நிலையில் மானிப்பாய் சுதுமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சந்தேகநபருடன் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.